தினமும் காலையில் சீரகத்தண்ணீர் குடிப்பதால் !
சீரகத் தண்ணீரை தொடர்ந்து குடிப்பது ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு வழி வகுக்கிறது. அஜீரணம், வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற பிரச்னைகளைத் தடுக்கிறது.
உடலிலுள்ள நச்சுகளை நீக்கி சுத்தப்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரித்து, ரத்தச்சோகை பாதிப்பை தவிர்க்க உதவுகிறது.
சீரகத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி, கொழுப்பை கரைக்கிறது.
இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நச்சுக்களை வெளியேற்றுவதால் ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்துக்கு வழிவகுக்கிறது.
இன்சுலின் உற்பத்தியை அதிகரிப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. இதனால் டைப் 2 நீரிழிவு பிரச்னையை கட்டுப்படுத்த உதவுகிறது.
கூந்தல் பலத்தை அதிகரிப்பதுடன் உதிர்வு, இளநரை போன்ற பல பிரச்னைகளை தவிர்க்கிறது.