குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை எப்படி, எப்போது நிறுத்தலாம்?
பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் புகட்ட வேண்டும்.
குழந்தை குடிக்க துவங்கும்போது முதலில் வரக்கூடிய முன் பாலில் நீர்ச்சத்துக்கள் தான் இருக்கும். பின் பாலில் உள்ள லிப்பிடுகள், ஊட்டச்சத்துக்கள் தான் பசியை ஆற்றி தேவையான போஷாக்கைத் தரும்.
பின்னர், இணை உணவுகளுடன் தாய்ப்பாலை இரண்டு வயது வரை வழங்கலாம்.
குழந்தைக்கு திட உணவுகளை கொடுக்க ஆரம்பித்த பின், ஒன்றரை வயதிற்குள், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
அதேவேளையில், 2 வயது ஆனவுடன் தாய்ப்பாலை உடனே நிறுத்த வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை. தாய்ப்பால் சுரக்கின்ற வரை வழங்கலாம். இரவில் மட்டுமாவது கொடுக்கலாம்.
2 வயதுக்கு மேல் தாய்ப்பாலை நிறுத்த நினைத்தால் மார்பக காம்பில் விளக்கெண்ணெய் தடவலாம். அச்சுவை பிடிக்காமல் பால் குடியை குழந்தை மறக்கும் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.
அப்போது குழந்தைகள் மார்பக பகுதியை தொடாதவாறு பார்த்து கொள்ளவும். குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பும்போது, எளிதில் தாய்ப்பாலை மறக்கச் செய்யலாம்.