மழைத்தண்ணீரை குடிப்பது ஆரோக்கியமானதா?
இயற்கையோடு ஒன்றி வாழ்கிறேன், உடலுக்கு ஆரோக்கியமானது என சிலர் மழைத்தண்ணீரை குடிக்கப் பயன்படுத்துகின்றனர். ஆனால், சரிவர வடிகட்டி, காய்ச்சி குடிக்காவிட்டால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மழைத்தண்ணீரில் அமிலத்தன்மை அதிகம். எனவே அதனை முறையாக சேகரித்து பயன்படுத்த வேண்டும்.
பிரத்தியேகமான தனிமங்களோ, தாதுக்களோ மழைத்தண்ணீரில் இல்லை. ஆனால் ஒவ்வொரு இடங்களிலும் பெய்யும் மழையானது வேறுபடும்.
தூய்மையான பகுதியில் இருக்கும் மழைத்தண்ணீரை சேகரித்து குடிக்கலாம்; அனல் மின் நிலையம் போன்றவை இருக்கும் இடங்களில் பெய்யும்போது, காற்றில் உள்ள நச்சுத் துகள்கள் கலந்திருக்கும்.
எனவே, மழைத்தண்ணீரின் தரம், சேமித்து வைக்கும் முறையை அடிப்படையாக வைத்து, ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை குடிக்கப் பயன்படுத்தலாம்.
புயல், வெள்ளம் போன்ற நெருக்கடி காலங்களில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத பட்சத்தில் மழை நீரை எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு நேரடியாக தராமல், வடிகட்டி, காய்ச்சி குடிப்பதே சிறந்த வழி.
இல்லாவிட்டால் அந்த தண்ணீரில் பூஞ்சைகள் வளர வாய்ப்புள்ளது. இதனால், கெடுதல் உண்டாக்கும் பாக்டீரியாக்களால் மஞ்சள் காமாலை, காய்ச்சல், நிமோனியா போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.