அல்சர் காரணமாக தொண்டை புண் ஏற்படுமா?
அல்சருக்கும், தொண்டை புண்ணிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
இரவில் தாமதமாக அதிக உணவு சாப்பிட்டு உடனடியாக துாங்கச் சென்றால் செரிமானத்தின் போது, வயிற்றில் அமிலம் சுரந்து அது உணவுக்குழாய் மூலம் தொண்டைக்கு வந்து சேரும்.
அமிலம் இரைப்பையில் தான் இருக்க வேண்டும். அது தொண்டைக்கு வந்தால் அரிக்க ஆரம்பித்து புண் உருவாகும்.
தொண்டையில் தொற்று என ஆன்டிபயாடிக், வலி நிவாரணி மாத்திரை பயன்படுத்தும் போது மீண்டும் அல்சர் அதிகரிக்கும்.
இரைப்பையிலிருந்து அமிலம் சுரந்து உணவுக்குழாய் மூலம் தொண்டையில் மட்டுமல்லாமல் மூச்சுக்குழாய்க்கும் தெளிக்கப்படும். அது நுரையீரலுக்கு சென்று வறட்டு இருமல் ஏற்படும்.
சிலருக்கு குரலில் கூட மாற்றம் ஏற்படும். இந்த பிரச்னைகளை தவிர்க்க மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணிக்குள் இரவு உணவை மிதமான அளவு சாப்பிடுங்கள்.
இரவில் சாப்பிட்டதற்கும் துாங்குவதற்குமான இடைவெளி நேரம் 2 முதல் 3 மணி நேரம் இருக்க வேண்டும்.