தொடர்கிறது இன்ப்ளுயன்ஸா தொற்று: தடுக்க தடுப்பூசி அவசியமா?

தமிழகத்தில், ஆர்.எஸ்.வி., என்ற சுவாசப்பாதை தொற்று மற்றும் இன்ப்ளுயன்ஸா தொற்று பரவி வருகிறது. பருவ நிலை மாற்றத்தால், பிப்.,யிலும் இத்தொற்றின் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

இருமல், தொண்டை ஒவ்வாமை, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பாதிப்புகளுடன் வருவோருக்கு அலட்சியம் காட்டாமல், இன்ப்ளுயன்ஸா பரிசோதனை செய்ய வேண்டும். நோயின் தீவிரத்தை பொறுத்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

பாதிப்பை தடுக்க முதியோர், கர்ப்பிணியர், இணை நோயாளிகள், 6-8 வயது குழந்தைகளுக்கு, 'இன்ப்ளுயன்ஸா' தடுப்பூசிகளை செலுத்த பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்துதல் அவசியம்.

அடிக்கடி கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் போது, முகக்கவசம் அணிதல் அவசியம்.

முகம், கண்கள், மூக்கு பகுதியை அடிக்கடி தொடுவதை தவிர்க்க வேண்டும். இடைவெளி விட்டு பேசுவதும், இருமும் போதும் கைக்குட்டை பயன்படுத்துவது அவசியம்.