இன்று உலக ஊரக வளர்ச்சி தினம்
உலகில் 80 சதவீத ஏழை மக்கள் கிராமப்பகுதிகளில் வாழ்கின்றனர்.
அவர்களின் தினசரி சம்பளம் ரூ. 183க்கு குறைவாக உள்ளது.
100 கோடி பேர் வறுமையில் உள்ளனர். இதில் பாதி பேர் குழந்தைகள்.
கிராமப்புற மக்கள்தொகையில் பாதி பேருக்கு சுகாதார வசதி கிடைப்பதில்லை.
2024ல் நகர்பகுதிகளில் 83% பேர் இணைய வசதி பயன்படுத்துகின்றனர்.
இது ஊரக பகுதியில் 50%க்கும் குறைவாக இருந்தது.
கிராமப்புற மக்களுக்கும் கல்வி, வேலை, சுகாதாரம், உணவு உள்ளிட்ட வசதிகள் கிடைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூலை 6ல் உலக ஊரக வளர்ச்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது.