ஏப்ரலில் அடுத்தடுத்து வெளியாகும் சரித்திரப் படங்கள்

பாகுபலி படம் வெளிவந்த பிறகு தென்னிந்தியத் திரையுலகினரின் பார்வை சரித்திரப் படங்கள் பக்கம் கொஞ்சம் திரும்பியது.

தற்போதைய கால கட்டப் படங்கள் மட்டுமின்றி, 80களின் படங்கள், சுதந்திர காலப் படங்கள், சரித்திரப் படங்கள் என சீரான இடைவெளியில் வருகின்றன.

இந்த ஏப்., மாதத்தில் வாரம் ஒரு சரித்திரப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகிறது. நேற்று (ஏப்., 7) சுதந்திர காலக் கதையுடன் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் 'ஆகஸ்ட் 16, 1947' படம் வெளியாகி உள்ளது.

அடுத்த வாரம் ஏப்., 14ம் தேதி சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' தெலுங்குப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

அதற்கடுத்த வாரம் ஏப்., 21ம் தேதி ஏழாம் நூற்றாண்டை மையமாகக் கொண்ட சரித்திரப் படமான 'யாத்திசை' வெளியாக உள்ளது.

ஏப்., 28ம் தேதி சோழர்களின் வரலாறை மையமாகக் கொண்ட சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன் 2' வருகிறது. இப்படி அடுத்தடுத்த வாரங்களில் சரித்திரப் படங்கள் வெளிவருவது அதிசய நிகழ்வுதான்.