நச்சு தன்மையை போக்கும் துளசி டீ

சுற்றுச்சூழலில் உள்ள மாசுக்களை சுத்தப்படுத்தும் துளசி செடிகள் இருந்தால், உடல் உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்பட்டு புத்துணர்வு பெறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வீடுகளில் வளர்க்கப்படும் ராம துளசி, இனிப்பான சுவையில் இருக்கும். இயற்கையான உயிரி மூலக்கூறுகளான ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகளவில் உள்ளன.

அடிக்கடி துளசி இலைகளில் 'டீ' தயாரித்து குடித்து வர, உடலிலுள்ள நச்சுத் தன்மை வெளியேறக்கூடும்; வைரஸ், பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராக செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தொழிற்சாலை, வாகனங்களில் இருந்து வெளியேறும் வேதிப் பொருட்கள், கடினமான தாதுக்களின் நச்சுகளில் இருந்து உடல் உள்ளுறுப்புகள், திசுக்களை பாதுகாக்கிறது.

துளசியில் உள்ள பீட்டா கரோடின், செல்களில் ஏற்படும் சிதைவுகளை சரி செய்யும் திறன் கொண்டது.

மன அழுத்தத்தை குறைப்பதில் துளசிக்கு பெரும் பங்கு உள்ளது. 'இயுஜினோல்' என்ற வேதிப்பொருள் திரவ வடிவில் துளசியில் உள்ளது.

துளசி சாறை அடிக்கடி குடிப்பதால், போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழுத்தத்தையும், அழற்சியையும் குறைக்கிறது. சுவாசக் கோளாறுகளுக்கும் சிறந்த தீர்வாக உள்ளது.