பச்சை பட்டாணி ஏன் ஆரோக்கியமானது?

பருப்பு வகையைச் சேர்ந்த, குளிர் கால உணவான பச்சை பட்டாணியில், வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கே, பொட்டாஷியம், துத்தநாகம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

பீன்சுடன் ஒப்பிடும்போது, இது குறைந்த கலோரி கொண்டது.

கண் கோளாறுகள், எலும்பு, பல் சம்பந்தமான நோய்களுக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், ரத்த விருத்திக்கும் பச்சை பட்டாணி உகந்தது.

நம் உடலுக்கு தேவையான போலிக் அமிலம் மற்றும் பி - காம்ப்ளக்ஸ் டி.என்.ஏ., கட்டமைப்பில் முக்கிய பங்காற்றுகிறது.

இதிலுள்ள அதிக நார்ச்சத்து, ஜீரண சக்தியை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்னையை போக்குகிறது. நல்ல பாக்டீரியாவை அதிகரித்து, குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

இதய நோய்க்கு காரணமான கெட்ட கொழுப்பை, இதிலுள்ள விட்டமின் பி3 (நியாசின்) தடை செய்கிறது. ஆன்டிஆக்ஸிடென்டுகள், இதய ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

இதிலுள்ள பொட்டாஷியம், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள், ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

நரம்புக் கோளாறுகள், சளி - காய்ச்சல், குளிர் காய்ச்சல் உள்ளவர்கள் அதிகளவில் பச்சை நிற காய்கறிகளை சாப்பிடலாம் என்பதால், பச்சை நிற பட்டாணியை அவசியம் உணவில் சேர்ப்பது உகந்தது.

அதேவேளையில், அளவாக சாப்பிடுவது நல்லது. தினசரி எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பது டயட்டீசியன்களின் அட்வைஸாகும்.