ஒரே அரிசியில் பலவகை கஞ்சி!

காய்ச்சல் போன்ற பொதுவான உடல் உபாதைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக் கூடிய கஞ்சி செய்து சாப்படுவது வழக்கம். அதை செய்யும் விதத்தை பொறுத்து பலன்கள் உண்டு.

கஞ்சி தயாரிக்கும் போது ஒரு பங்கு அரிசியுடன், 14 மடங்கு தண்ணீர் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். அரிசி நன்கு வெந்து, அதே சமயத்தில், பருக்கை உடையாமல் இருக்கும்.

இதைக் குடிப்பதால் தாகம் நீங்கும். சோர்வு, பலவீனம், வாத நோய்கள் இவற்றிற்கு நல்லது. செரிமானமும் எளிதில் நடக்கும்.

குழைத்து நன்கு வேக வைத்து வடித்த சாதத்தை சாப்பிட்டால், சர்க்கரை கோளாறினால் ஏற்படும் புண்ணை ஆற்றும் திறன் இதற்கு உண்டு.

மேலும் கண் நோய்களுக்கு நல்லது. எண்ணெய் பலகாரம் அதிகமாக சாப்பிட்டு, வயிறு மந்தமாக இருக்கும்போது, இந்த சாதத்தை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.

ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, நீரை வடிக்காமல் வேக வைத்து சாப்பிடுவது தேக ஆரோக்கியத்திற்கு நல்லது.

குறிப்பாக சாப்பிட்டவுடன் மலம் கழிக்க வேண்டிய, 'இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்' பிரச்னை உள்ளவர்கள், இது போன்று சாதம் சாப்பிடுவது பலன் தரும்.