சாப்பிடும்போது செல்போனை தவிர்ப்பது கட்டாயம்

சாப்பிடும் போது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சமீபத்திய ஆய்வு எச்சரித்துள்ளது.

இன்றைய நாகரிக உலகில் பலரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். இதில் பல பணிகளையும் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாளைக்கு ஒருவர் சராசரியாக 150 வெவ்வேறு பொருட்களை தொடுகிறோம்.

இதில் ஒட்டிக்கொள்ளும் கண்ணுக்கு தெரியாத கிருமிகள், ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது அதில் சேர்கிறது.

சாப்பிடும் போதும் அவற்றை பயன்படுத்துவதால், அக்கிருமிகள் டைனிங் டேபிள், உணவிலும் கலக்கிறது.

இதனால் 'புட்பாய்சன்' உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.