97 சதவீத மக்களிடம் கொரோனா எதிர்ப்பு சக்தி - சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்

தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக, 97 சதவீதம் பேரிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக, பொது சுகாதாரத் துறை ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் துவங்கியபோது, 32 % இருந்த நோய் எதிர்ப்பு சக்தி அளவு, தற்போது, 97% அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி, உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு முறையால் நோய் சக்தி அதிகரித்துள்ளதாக, பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 'ஒமைக்ரான்' வகை கொரோனா பாதிப்பு தான் உள்ளது; இது வீரியமற்றது; உயிர் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் இருமல், சளி மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு, மூன்று நாட்களில் குணமடைந்து விடுவதாக தெரிகிறது.

குறிப்பாக 1,214 முதியவர்களின் ரத்த மாதிரிகள் எடுத்து, பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில், 97 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

எனவே, ஒமைக்ரான் போன்ற வீரியமற்ற கொரோனா, அவர்களை பெரியளவில் பாதிக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் முதியோர், இணை நோயாளிகள், கர்ப்பிணியர் ஆகியோர், பொது இடங்களுக்கு செல்லும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்றும் கூறப்பட்டுள்ளது.