நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொண்டைக்கடலை நல்லது
பொதுவாக நீரிழிவின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும், சில விதமான அழற்சி ஏற்படும்.
கெட்ட கொழுப்பு அதிகரிப்பது இதய நோய்களுக்கு வழிவகுக்கும். இதைச் சரி செய்யும் ஆற்றல் கொண்டைக் கடலை, கருப்பு பீன்ஸ்க்கு உள்ளது என்கிறது சமீபத்திய ஆய்வு.
அமெரிக்காவின் இலினாய்ஸ் தொழில்நுட்பக் கழகம் இது தொடர்பாக நீரிழிவின் ஆரம்ப நிலையில் இருந்தவர்களிடம் ஆய்வு மேற்கொண்டது.
கொண்டைக் கடலை, கருப்பு பீன்ஸ் உடலுக்கு நன்மை அளிப்பவை என்றாலும், நீரிழிவுடன் தொடர்புப்படுத்தப்பட்டு இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில்லை.
ஆய்வில், பிரிவினருக்குக் கொண்டைக் கடலையும், மற்றொரு பிரிவினருக்குக் கருப்பு பீன்ஸும், இன்னுமொரு பிரிவினருக்கு அரிசிச் சாதமும் கொடுக்கப்பட்டது.
அரிசி உண்டவர்களை விடக் கொண்டைக் கடலை, கருப்பு பீன்ஸ் உண்டவர்களுக்குக் கெட்ட கொழுப்பும், அழற்சியும் குறைந்திருப்பது தெரியவந்தது.
இவை இரண்டும் ரத்த சர்க்கரை அளவைக் கூட்டவோ, குறைக்கவோ இல்லை. எனவே மாலை நேரச் சிற்றுண்டியாக இவற்றைச் சாப்பிடலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.