இன்று உலக வறட்சி ஒழிப்பு தினம்

ஒவ்வொரு விநாடிக்கும் நான்கு கால்பந்து மைதானம் அளவுக்கு, வளமான நிலப்பகுதி பாதிப்படைகிறது.

உலகில் ஏற்கனவே 40 சதவீத நிலங்கள் பசுமையை இழந்து விட்டன.

இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 17ல் உலக பாலைவனமாக்கல், வறட்சியை எதிர்த்து போராடுதல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

'நிலத்தை மீட்டெடுங்கள்; வாய்ப்புகளை உருவாக்குங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

உலகில் 230 கோடி பேர் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

வறட்சி காரணமாக 1900 முதல் 2019 வரை 270 கோடி பேர் பாதிக்கப்பட்டனர்.

எனவே வறட்சியை போக்கும் முயற்சிகளை கையில் எடுத்து, இயற்கையைக் காக்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.