இன்று உலக சிங்க தினம்!

காடுகளின் ராஜா என சிங்கம் அழைக்கப்படுகிறது. வீரத்தின் உதாரணமாக சிங்கத்தை குறிப்பிடுகின்றனர்.

இதன் வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆக. 10ல் உலக சிங்க தினம் கடைபிடிக்கப்படுகிறது.

முன்பு ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா முழுவதும் சிங்கங்கள் வாழ்ந்தன.

ஆனால் இன்று ஆப்ரிக்கா, ஆசியாவின் சில பகுதிகளில் மட்டுமே சிங்கம் வாழ்கின்றன.

முன்பு ஆப்ரிக்காவில் 2 லட்சம் சிங்கங்கள் இருந்தன. இன்று 20 ஆயிரம் மட்டுமே உள்ளன.

இந்தியாவில் 2015ல் 523 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 2020ன் படி 674 ஆக உள்ளது.

சிங்கங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவது உணவு கிடைக்காமல் போவது மனிதர்களால் ஏற்படும் பிரச்னைகள் ஆகிய உள்ளன.

எனவே சிங்கங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்.