தொல்லை தரும் தேமல்: கவனித்தால் எளிதாக விரட்டலாம்....!

மார்பு, கழுத்து, முகம், தோள்பட்டை, கை,கால், தொடை பகுதிகளில் திட்டுத்திட்டாக படைகள் போன்று காணப்படுவது இதன் அறிகுறியாகும்.

வியர்வை அதிகம் சுரக்கும் சருமத்தை கொண்ட நபர்கள் தினமும் இரு வேளை கடலை மாவு அல்லது பச்சை பயறு மாவு கொண்டு குளிக்க வேண்டும்.

தேமலுக்கு சோப்பு வேண்டும் என நினைப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் கெமிக்கல் குறைவான சோப்பை பயன்படுத்த வேண்டும்.

துளசி இலைகளை பேஸ்ட் போல் அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து கழுவினால் மறையும்.

ஒரு கப் நீரில் வேப்பிலைகளை போட்டு நன்கு கொதிக்க வைத்து, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால், சரும பிரச்னை குறையும்.

மஞ்சள் தூளை தயிரில் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர வைத்து, கழுவி வந்தால் மறையும்.

தேங்காய் எண்ணெயில் சுத்தம் செய்த ஆடாதோடை இலையை போட்டு ஒரு வாரம் வெயிலில் வைத்த பிறகு, தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.

முள்ளங்கியை மோருடன் கலந்து அரைத்து, தேமல் உள்ள இடங்களில் தடவினால் மறையும்.