ஆரோக்கியத்துக்கு கை கொடுக்கும் தயிர் சாதம்..!

தயிர் சாதம் சாப்பிடுவதால், உடலில் நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுதோடு, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தயிரில் உள்ள சிறப்பு புரதங்கள், ஊட்டச்சத்து, மெக்னிசீயம், பொட்டாசியம் ஆகியவை ரத்த அழுத்ததை கட்டுப்படுத்துவதோடு, இதய ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

தயிர் சாதத்தில் அதிகளவில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ கண்களை பாதுகாக்கிறது. இதில், கார்னியாவை பாதுகாக்கும் கரோட்டினாய்டுகள் அதிகமுள்ளன.

தயிரில் உள்ள புரோபயாடிக் பாக்டீரியா மற்றும் நல்ல கொழுப்புகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.

ஒரு கப் தயிரில் 270 மி.கி., கால்சியம் உள்ளது. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்படும்.

தயிரில் சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும் மூலக்கூறுகள் அதிகம் உள்ளன.

கறிவேப்பிலையில் ரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும் பண்புகள் உள்ளன. இதை தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, ரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும்.