குரங்கு அம்மையை விரட்ட என்னவெல்லாம் செய்யணும் தெரியுமா?

குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கவும் வேண்டும் என மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.

குரங்கு அம்மை நோயை எம்பாக்ஸ் என்று அழைக்கின்றனர். இது மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது.

குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு உடையை அணிந்து பணியாற்ற வேண்டும்.

குரங்கம்மை நோய் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் 21 நாட்களுக்குள் காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி ஏற்பட்டால் 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுக்குச் சென்று சோதனை செய்து சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது வைரஸ் தொற்று என்பதால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக துவங்க வேண்டும்.

இத்தகைய அறிகுறியுடன் வரக் கூடியவர்களை தனியார் மருத்துவமனைகளும் கண்காணித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.