இரவு நேரத்தில் மட்டும் ஏன் தாமதமாக சாப்பிடக் கூடாது?
தூக்கம் கெடுதல்... தாமதமாக சாப்பிடும்போது தூங்குவதிலும் தாமதம் உண்டாகக்கூடும். இது தூக்க சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இரவில் குழப்பமான கனவுகள் உண்டாக வழிவகுக்கும்.
மோசமான செரிமானம்... தாமதமாக இரவு உணவை உண்பது, இரைப்பை பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. உணவு சரியாக செரிமானம் ஆகாமல் வயிற்றில் அதிக அமிலம் சுரப்பதே இதற்குக் காரணம்.
எடை அதிகரிப்பு... இரவு நேரத்தில் உடலின் வளர்சிதை மாற்றம் குறைகிறது. இது பகலில் உள்ளதைப் போன்று கலோரிகளை எரிப்பதில் பயனுள்ளதாக இல்லாததால், உடல் எடை அதிகரிக்கும்.
மன ஆரோக்கியத்தின் மீதான விளைவு... சரியாக தூங்காத போது, மறுதினம் எரிச்சல் மற்றும் மோசமான மனநிலையுடன் எழுந்திருக்க வாய்ப்புள்ளதால், மனச்சோர்வு, பதட்டம் ஏற்படக்கூடும்.
ரத்த அழுத்தம் அதிகரிப்பு... இரவில் தாமதமாக சாப்பிட்டு விட்டு தூங்குவதை தொடர்ச்சியாக செய்யும் போது, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பாதிப்புக்கு வழிவகுக்கும்.
படுக்கைக்கு செல்வதற்கு 2 அல்லது 3 மணி நேரத்துக்கு முன் சாப்பிடுவதை நிறுத்துவது நல்லது. இரவு 9 மணிக்கு மேல் எந்த உணவையும் சாப்பிடுவது நல்லதல்ல என்பது டயட்டீசியன்களின் அட்வைஸ்.