ஆபத்துக்கு வழிவகுக்கும் தனிமை

ஒரு நாளில் சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்களாவது தனிமை மற்றும் மவுனம் தேவைதான். இதனால் உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கிறது.

அடுத்த நாளை புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்ள முடியும். இதனால் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் என அழைக்கப்படும் கார்டிசாலின் அளவும் குறைகிறது.

அதே சமயத்தில் அளவுக்கதிகமான தனிமை பல்வேறு பாதிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும்.

தனிமையில் இருப்பது இதய பாதிப்பு, பக்கவாதம், தொற்றுநோய், நீரிழிவு, மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் உருவாக காரணமாகிறது என பிரிட்டன் ஆய்வு தெரிவித்துள்ளது.

40 - 69 வயதுக்குட்பட்ட 42 ஆயிரம் பேரின் ரத்த மாதிரியை எடுத்து புரோட்டின் அளவை சோதனை செய்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனிமை நேரத்தை தவிர்த்து விட்டு நண்பர்கள், குடும்பம், உறவுகளுடன் அதிக நேரம் இருப்பது, கலந்துரையாடுவது, ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மேற்கண்ட உடல்நல பாதிப்புகளை தடுக்க உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.