ரசாயனம் கலந்த மாம்பழங்கள்... கவனமாக இருங்க !

சமீப ஆண்டுகளாகவே, கால்சியம் கார்பைட் பயன்படுத்தி, மாம்பழங்களை பழுக்க வைத்து, விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.

ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிட்டால், நீரிழிவு, புற்றுநோய் ஏற்படுமென சமீபத்திய ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது.

இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் வரத்து மிக குறைவு என்பதால், குறுக்கு வழியில் பழுக்க வைத்து, மார்க்கெட்டில் பலரும் விற்கின்றனர்.

எனவே, பொது மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். பழங்கள் வாங்கும் போது, உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென தோட்டக்கலைத் துறை எச்சரித்துள்ளது.

இயற்கையாக பழுத்த பழங்கள்; ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்.

இயற்கையாக பழுத்த பழங்கள் லேசான சிவப்பு, மஞ்சள் நிறத்தில் காணப்படும். மிருதுவாக இருக்கும். நீரில் மூழ்கும். ருசியாகவும், அதிகமான சாறுடன் இருக்கும்.

கார்பைடு பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள், ஒரே வடிவத்திலும், ஒரே நிறத்திலும் இருக்கும். ஆங்காங்கே பச்சை, கருப்பு புள்ளிகள் காணப்படும்.

மிருதுத்தன்மையை இழந்திருக்கும்; வாசம் இருக்காது; நீரில் மிதக்கும் என அறுவுறுத்தப்பட்டுள்ளது.