திப்பிலியின் அற்புதமான மருத்துவ பயன்கள்
திப்பிலியை ஆங்கிலத்தில், 'லால் பெப்பர்' என்பர். இதற்கு சரம், சாடி, சவுண்டி, குடாரி, கோலி, அம்பு, ஆர்கதி, தண்டுலி, துளவி, வைதேகி, மாகதி என்று தமிழில் பல பெயர்களுண்டு.
இது கொடிவகை, அரிசிச் திப்பிலி, யானைத் திப்பிலி என இருவகை உள்ளது. அதிக வீரியம் இதற்கு உண்டு. பச்சையாக உள்ள போது இனிக்கும். காய்ந்தபின் காரமாகும்.
வாய்வகற்றும், பச்சைத் திப்பிலி பித்தம் நீக்கும். உலர்ந்த திப்பிலி இருமல், குன்மம், ஈளை, பாண்டு, தலைவலி, மயக்கம் ஜலதோஷம் முதலியவற்றை அடக்க உதவும்.
திப்பிலிச் சூரணத்தை, வெற்றிலை, தேனுடன் கலந்து உண்டால் கோழை நீங்கும். இருமல், காய்ச்சல் தீரும்.
இதே சூரணத்தைப் பசும்பாலுடன் உண்டால் மயக்கம், வாய்வு, ஜன்னி நீங்கும்; காச நோயும் தீரும்.
திப்பிலி மூலத்தை கண்டந்திப்பிலி என்பர். அம்பினடி, வேர், மோடி, தேசாவரம், நறுக்குத் திப்பிலி என்றும் பலப்பல பெயர்களுண்டு
சோகை, தூக்கம், பித்தம், இருமல், மேகம், உடல் வலி, குரல் கம்மல் நீக்கம். துர்நீரை வளரச் செய்யும்.
இதைப் பால்விட்டு அரைத்துப் பாலுடன் கொடுத்தால் குறுக்கு வலி, நாவறட்சி, வாத பாதிப்புகள் எல்லாம் போகும்.