புற்றுநோயை குணப்படுத்த முடியும்... சில புரிதல்கள்...
ஆண்களுக்கு வாய், உதடு, நுரையீரல், இரைப்பை ஆகியவையும், பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் ஆகியவை நோய் தாக்கும் இடங்கள்.
புகையிலை, சிகரெட், குடிப்பழக்கம் ஆகியன ஆண்களுக்கு காரணமாக உள்ளது. சுகாதாரம் இல்லாததும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்பட காரணம்.
ஆனால், இவையெல்லாம் 20 சதவீதம் மட்டுமே, 80 சதவீத புற்றுநோய் உணவு முறைகளால்தான் ஏற்படுகிறது.
மாறிவரும் உணவு முறை, உடல் பருமன், மன அழுத்தம், துாக்கமின்மையும், உள்ளிட்டவை புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.
புற்றுநோய் வராமல் இருக்க, நமது உணவு முறை, வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
புற்றுநோய் ஒரு உயிர் கொல்லி நோயாக இருந்தாலும், நவீன மருத்துவ உதவியுடன் குணப்படுத்த முடியும், உயிரை பாதுகாக்க முடியும்.
வலி, கட்டி போன்று ஏதாவது இருந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டும். பலர் நோய் முற்றிய பிறகே, மருத்துவமனைக்கு செல்கின்றனர். ஆரம்ப பரிசோதனை மிகவும் அவசியம்.
பெண்கள் மாதம் ஒரு முறை, மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.