பிராணாயாமம் உடன் நடைபயிற்சி.. நுரையீரலுக்கு நல்லதா?

நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க பிராணாயாமம் தினமும் செய்து உதவும் என கூறப்படுகிறது.

நாம் சுவாசிக்கும் காற்று, சுவாசக் குழாய் வழியாக நுரையீரலில் உள்ள அல்வியோலை என்ற சிறிய காற்றுப் பைகளுக்குள் செல்கிறது.

அங்கு காற்றில் உள்ள ஆக்சிஜனை பிரித்து, ரத்த ஓட்டத்தில் கலக்கச் செய்து உடல் முழுதும் செல்களுக்கு அனுப்புகிறது.

செல்கள் ஆக்சிஜனை உபயோகிக்கும் போது, உருவாகும் கார்பன்டை ஆக்ஸ்சைடு மூச்சை வெளி விடும் போது வெளியேறுகிறது. இது தான் நுரையீரலின் முக்கிய பணி.

ரத்த ஓட்டம் அதிகமாகும் போது நுரையீரலை பரிசோதனை செய்தால் தான் இந்த பணி சரியாக நடக்கிறதா என்று தெரியும்.

பொதுவாக உட்கார்ந்து கொண்டு தான் பிராணாயாமம் செய்வோம். மூச்சை நன்றாக உள்ளிழுக்கும் போது, நுரையீரல்விரியும். ஆனால் ரத்த ஓட்டம் குறைவாகவே இருக்கும்.

சுறுசுறுப்பாக நடக்கும் போது எப்படி இதயத் துடிப்பு அதிகமாகி, ரத்தத்தை வேகமாக 'பம்ப்' செய்கிறதோ, அது போல தான் வேகமாக நடக்கும் போது நுரையீரலுக்கும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

இதயமும் நுரையீரலும் எல்லா நேரமும் இணைந்தே செயல்படுகிறது. இதயத்திற்கு செல்லும் ரத்தம் முழுதையும் சுத்தம் செய்வது நுரையீரல் தான்.

வேகமாக நடக்கும் போது அதிக ஆக்சிஜனை நுரையீரலால் தர முடிந்தால், நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கிறது, நுரையீரலின் செயல்பாடு நன்றாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

பிராணாயாமம் மட்டும் செய்வதால் பலன் முழுமையாகக் கிடைக்காது. பிராணாயாமம் செய்து விட்டு, சுறுசுறுப்பாக நடக்க வேண்டும். சுறுசுறுப்பாக 20 நிமிடங்கள் நடந்த பின் பிராணாயாமம் செய்யலாம்.