கண்களை சிவப்பாக்கும் காய்ச்சல்... ஜனவரி வரை எச்சரிக்கையாக இருங்க!
தமிழகத்தில், 'ப்ளூ வைரஸ்' வகையைச் சேர்ந்த, 'இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி' வகை காய்ச்சல்கள், 75 % பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அத்துடன், 11 வகையான வைரஸ் பாதிப்புகளாலும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒரு வைரஸ் பாதிப்பு குணமடைந்த ஓரிரு வாரங்களில், மற்றொரு வைரஸ் பாதிப்பு ஏற்படுவதால், மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், கண்களில் நீர் வடிதல், சிவந்து காணப்படுதல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் கூடிய காய்ச்சலால் தற்போது அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, பள்ளி செல்லும் சிறார்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தட்ப வெப்பநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, உடல் வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஜனவரி மாதம் வரை தொடரும்.
பெரும்பாலும், 'இன்ப்ளூயன்ஸா' வகை காய்ச்சல் என்பதால், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. அதேநேரம், பாதிப்பு ஏற்பட்டால் டாக்டரிடம் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
குழந்தைகள், சிறார்களை, பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதை, பெற்றோர் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.