புதிய 'ஸ்டைலில்' வருகிறார் 'தல' தோனி
இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக ஜொலித்தவர் தோனி. மூன்று விதமான உலக கோப்பை வென்று தந்தார்.
ஓய்வுக்கு பின் ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணியை வழிநடத்துகிறார். வரும் மார்ச் 22ல் 17வது ஐ.பி.எல்., தொடர் துவங்கலாம்.
இதில் சாதிப்பதற்காக சொந்த ஊரான ராஞ்சியில் (ஜார்க்கண்ட்) பயிற்சியை துவக்கி உள்ளார்.
இம்முறை தோனியின் புதிய 'லுக்' ரசிகர்களை கவரும். இவரது சமீபத்திய போட்டோவை 'கூல்...கூலர் தல' என்ற வாசகத்துடன் சென்னை அணி நிர்வாகம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதில் கழுத்து வரை கூந்தலுடன், 'கூலிங் கிளாஸ்' அணிந்து ஜம்மென்று உள்ளார் தோனி. இதை சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து லைக் செய்துள்ளனர்.
'வித்தியாசமான 'ஹேர்ஸ்டைலில்', பழைய தோனியின் நினைப்பு தான் வருகிறது, இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார், கிரிக்கெட் வாழ்க்கையை கழுத்து வரை கூந்தலுடன் துவக்கினார்.
இதே போல நீண்ட கூந்தலுடன் முழுமையாக ஓய்வு பெறப் போகிறாரா, வாழ்க்கை கடிகாரத்தை திருப்பி பார்ப்பது போல் உள்ளது' என பலவிதமாக ரசிகர்கள் 'கமென்ட்' செய்துள்ளனர்.
இந்நிலையில்... 'சமீபத்தில் 'தல' தோனியை சந்தித்தேன். தலைமுடியை கழுத்து வரை வளர்த்துள்ளார். பழைய தோனியை பார்ப்பது போல இருந்தது.
தற்போதைக்கு இவர் ஓய்வு பெற வாய்ப்பு இல்லை. சென்னை அணி என்றால் தோனி; தோனி என்றால் சென்னை அணி' என முன்னாள் வீரர் வேகப்புயல் இர்பான் பதான் கூறியுள்ளார்.